கொடநாடு வழக்கு- சயான் வாக்குமூலம் நாளை மறுநாள் ஊட்டி கோர்ட்டில் தாக்கல் !
கொடநாடு வழக்கு- சயான் வாக்குமூலம் நாளை மறுநாள் ஊட்டி கோர்ட்டில் தாக்கல் !

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கின் புலன்விசாரணை 60 நாட்களுக்குள் முடிக்கப்படும் என்றும் யாருடைய நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்துவது நோக்கமல்ல என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து ஜெயலலிதாவின் கார் டிரைவராக பணியாற்றிய சேலம் மாவட்டம் எடப்பாடியைச் சேர்ந்த கனகராஜின் அண்ணன் தனபாலிடம் விசாரிக்க முடிவு செய்து அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதில் கனகராஜ், கொடநாடு வழக்கில் தேடப்பட்டவர். சம்பவம் நடந்த சில நாட்களில் அவர் விபத்து ஒன்றில் பலியானார். அதன்பிறகு கனகராஜின் அண்ணன் தனபால், தனது சகோதரர் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி வந்தார்.
தனபாலுக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் நேற்று ஊட்டிக்கு வந்த அவர் போலீசார் முன்பு ஆஜரானார். சுமார் ஒரு மணி நேரம் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். தனது தம்பியின் மரணம் விபத்து அல்ல, திட்டமிட்ட கொலை. எனவே கனகராஜின் விபத்து வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என அவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கின் புலன்விசாரணை 60 நாட்களுக்குள் முடிக்கப்படும். யாருடைய நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்துவது நோக்கமல்ல என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வழக்கின் தீர்ப்பை 27-ந் தேதி அறிவிப்பதாக நீதிபதி தெரிவித்தார்.இந்த தீர்ப்பு 27-ந் தேதி வரும் நிலையில், அதேநாளில் நீலகிரி கோர்ட்டில் சயானின் வாக்குமூலம் தாக்கல் செய்யப்பட உள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.